சதுரங்கத் துறையில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சகோதரர்கள்!

சதுரங்கத் துறையில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சகோதரர்கள்!

கடந்த வாரம் 9 ஆம் திகதி நியூசிலாந்து - கிறைஸ்ட்சர்ச் நகரில் Swiss முறையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் புரோ நைட்ஸ் செஸ் அகாடமி மாணவர்கள் இருவர் பங்குபற்றி இருந்தனர்.

அதில் 10 வயது பிரிவில் 5 போட்டிகளில் ஐந்து வெற்றிகளையும் பெற்று முதலாவது இடத்தினை அஞ்சுலன் ஜெகனேந்திரன் எனும் மாணவனும், 13 வயது பிரிவில் மூன்றாவது இடத்தினை ஆரங்கன் ஜெகனேந்திரன் என்ற மாணவனும் வெற்றி பெற்று அடுத்து இடம்பெறுகின்ற தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள இரண்டு சிறுவர்களும் இத்துறையில் எதிர்காலத்தில் இன்னும் சாதிக்க ​வேண்டும் என விளையாட்டுத் துறை ஆர்வலர்கள் வாழ்த்தியுள்ளனர்.