நிந்தவூரில் பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நிந்தவூரில் பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.