இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்!

இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்!

இலங்கையில் புதிதாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு நிதியின் 2023 ஆம் ஆண்டுக்கான வட்டியை செலுத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று [13] விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, இலங்கை மின்சார சபை சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் நிர்மலன் விக்னேஸ்வரன், புதிய மின்சார இணைப்புக்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு கட்டணத்தின் 2023ஆம் ஆண்டுக்கான 11.67 சதவீத வருடாந்த வட்டியை செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.