குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பகுதியில் குழப்ப நிலை!

முல்லைத்தீவு - குருந்தூர் மலை - ஆதிசிவன் ஐயனார் ஆலய வளாகத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் பொங்கல் வழிபாடு இன்று (18) முற்பகல் இடம்பெற்றது.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய பகுதியில் குழப்ப நிலை!

முல்லைத்தீவு - குருந்தூர் மலை - ஆதிசிவன் ஐயனார் ஆலய வளாகத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் பொங்கல் வழிபாடு இன்று (18) முற்பகல் இடம்பெற்றது.

குறித்த பொங்கல் வழிபாட்டு நிகழ்வு இடம்பெற்ற ஆலயத்திற்கு அருகில் உள்ள விகாரையிலும் இன்று முற்பகல் வழிபாடு இடம்பெற்றது.

தென்னிலங்கையில் இருந்து பேருந்துகளில் சென்ற பௌத்த பிக்குகள் மற்றும் சில பொது மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலயம் மற்றும் விகாரை அமைந்துள்ள பகுதிகளுக்கு இருமருங்கிலும் மத்திய பகுதியிலும் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். 

குருந்தூர் மலையில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

எனினும், சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயன்ற போதும் காவற்துறையினரின் தலையீட்டால் அவை தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.