சீனா தனது  பாதுகாப்பை  வலுப்படுத்த விரும்பும் நாடுகள்! 

சீனா தனது  பாதுகாப்பை  வலுப்படுத்த விரும்பும் நாடுகள்! 

இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் சீனா தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளது.
 
இதற்கான ஒரு அங்கமாக சீனா இராணுவக் குழுவொன்று அண்மையில் இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக சீனா இராணுவம் அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

இதன்போது, பிராந்திய பாதுகாப்பு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பில், அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த நாடுகளிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
 
தெற்காசியாவில் அதன் மூலோபாய போட்டியாளரான இந்தியாவை எதிர்கொள்வதற்காக, அண்டை நாடுகளான இலங்கை, மாலைத்தீவு மற்றும் நேபாளம் போன்றவற்றுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா அக்கறை செலுத்தி வருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.