நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது!

நுவரெலியாவில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது!

நுவரெலியா பகுதியில் மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி கைது நுவரெலியா காவல்துறை குற்றப் புலனாய்வுப்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொத்மலை, மற்றும் வட்டவளை பகுதிகளைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவரும் 39 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்ட வந்த நிலையில், நுவரெலியா காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி, யாழ்ப்பாணம், பண்டாரவளை ஜாஎல, குருநாகல் மற்றும் ஹட்டன் ஆகிய காவல்துறை நிலையங்களிலும் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நேற்று  முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையிலும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.