இன்றைய காலநிலை தொடர்பான விபரம்

இன்றைய காலநிலை தொடர்பான விபரம்

நாட்டின் சில பகுதிகளில் இன்று  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.