போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

சந்தேகநபர்கள் போலி நாணயத் தாள்களை அச்சிட்டு அவற்றினூடாக போதைப்பொருள் கொள்வனவு செய்துவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

போலி நாணயத்தாள்களை அச்சிடுவது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, மாளிகாவத்தை பொலிஸார் சுற்றிவளைப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது 4,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.