இரவு - பகல் சமமாக இருக்கும் பூமியின் புகைப்படம் : courtesy ஐரோப்பிய விண்வெளி மையம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA தனது X பக்கத்தில் இரவு பகல் சமமாக இருக்கும் பூமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இரவு -  பகல் சமமாக இருக்கும்  பூமியின் புகைப்படம் : courtesy ஐரோப்பிய விண்வெளி மையம்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA தனது X பக்கத்தில் இரவு பகல் சமமாக இருக்கும் பூமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது.

இந்தப் புகைப்பட பகிர்வில் ESA கூறுகையில் ‘‘குளிர்காலம் வருகிறது. பகல் இரவு பாதியாக இன்று பிரிந்தது. இந்த புகைப்படம் காலை 09.00 மணிக்கு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பேஸ்.காம் இணையதளத்தில், ‘‘பூமியின் வடக்கு அரைகோள பகுதியில் இலையுதிர் காலம் தொடங்கியது. 

தெற்கு அரை கோளத்தில் வசந்த காலம் தொடங்கியது. 

தற்போது சூரியன் தென் திசையில் பயணிக்கிறது’’ என்றுதெரிவித்துள்ளது. 

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.