உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு - 112 பேர் பலி!

உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு - 112 பேர் பலி!

காஸாவில் உணவுப் பொருட்களைப் பெற்றுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் சுமார் 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதன்போது 760 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். 

இந்தநிலையில் அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி மக்கள் மீது தமது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.