தென்னாப்பிரிக்காவில் வாயுக்கசிவு:16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் 16 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்காவில்  வாயுக்கசிவு:16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட வாயுக்கசிவினால் 16 பேர் உயிரிழந்தனர்.

நைட்ரைட் ஒக்ஸைட் கசிவினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜொகஸ்பேர்க் அருகே ஒரு சட்டவிரோத குடியேற்றம் ஒன்றில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நைட்ரைட் ஒக்ஸைட் சட்டவிரோத தங்கச்சுரங்க பணியாளர்களால் பயன்படுத்தப்படும் நிலையில், அந்த வாயு கசிவினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.