தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் 2033ஆம் ஆண்டு வரையிலான  தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டம் தொடர்பில், மூன்றாவதும் நான்காவதும் கலந்துரையாடல்களை, கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு நடத்தியுள்ளது.
 
குறித்த கலந்துரையாடல், கல்வி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷணன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் அதில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
 
அத்துடன், தேசியக் கல்வியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் சுருக்கம் பற்றிய பல்வேறு அம்சங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.