மீனவர்களுக்கு எச்சரிக்கை - கடல் சீற்றம் அதிகரிப்பு!

மீனவர்களுக்கு எச்சரிக்கை - கடல் சீற்றம் அதிகரிப்பு!

இலங்கையில் திடீரென ஏற்படும் அசாதாரண காலநிலை காரணமாக கடல்சீற்றம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் பற்றி இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிய கடற்பகுதிகளில் 2.5 முதல் 3.0 மீற்றர் வரையான கடலலையின் உயரம், 12-16 வினாடிகள் வரை வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். 

குறித்த கடற்கரைகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமை, காரணமாக குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினரை இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.