போதைப்பொருள், பெருந்தொகை பணம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் - துன்னாலை குடவத்தை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருளுடன் பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள், பெருந்தொகை பணம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் பெண்ணொருவர் கைது!

43 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று (21) கைதுசெய்யப்பட்டார்.

620 மில்லிகிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் சந்தேக நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (21) தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது வீட்டில் இருந்து நான்கு வாள்களும் சட்டவிரோதமான சிகரெட் பெட்டிகளும் மீட்கப்பட்டன.

உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 38 வயதான சந்தேக நபரொருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைக்காக நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.