புதிய வகை கொரோனா தொற்று - முடக்கப்படுமா இலங்கை?

புதிய கொரோனா வைரஸ் திரிபானது (ஜே.என்-1 ஒமிக்ரோன்) இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய்த் தொற்று எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வு கூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா தொற்று - முடக்கப்படுமா இலங்கை?

தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இது குறித்த  தகவல்களை பதிவிட்டுள்ளார்.

கொவிட்-19 பரிசோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன.

அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சலும் பரவும் நிலையில், தொடர்ச்சியான காய்ச்சல் அறிகுறி தென்படுமானால் அது குறித்து, பொதுமக்கள் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.