செக் குடியரசு - பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் உயிரிழப்பு!

செக் குடியரசின் - ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

செக் குடியரசு - பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் உயிரிழப்பு!


 
சம்பவத்தில் 25 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கியுடன் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்குள் பிரவேசித்த சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
 
எனினும், அவர் இந்த தாக்குதலை நடத்தியமைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேகநபர் மீது பதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
 
இதன்போது, சந்தேகநபரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நவீன செக் குடியரசின் வரலாற்றில் இது மோசமான சம்பவமாக பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.