தெற்கு கிரேக்க கடற்பகுதியில் படகு விபத்து - 78 பேர் உயிரிழப்பு!

தெற்கு கிரேக்க கடற்பகுதியில் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு கிரேக்க கடற்பகுதியில் படகு விபத்து - 78 பேர் உயிரிழப்பு!

தெற்கு கிரேக்க கடற்பகுதியில் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் பலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமெடுப்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, இதுவரை 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், ஒரு கடற்படை போர் கப்பல், ஒரு இராணுவ போக்குவரத்து விமானம், மற்றும் ஒரு விமானப்படை உலங்கு வானூர்தி என்பன தேடுதலில் ஈடுபட்டுள்ளன.

லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்ற போதே இந்த படகு கவிழ்ந்துள்ளது.