மின்சார திட்டத்திற்கான மின்மாற்றி வெடிப்பினால் 15 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றின் - நமாமி கங்கை மின் விநியோக திட்ட தளத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின்சார திட்டத்திற்கான மின்மாற்றி வெடிப்பினால் 15 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றின் - நமாமி கங்கை மின் விநியோக திட்ட தளத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று (19) அதிகாலை அங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அங்கு மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர். 

குறித்த விபத்தில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி காவல்துறை அதிகாரி பர்மேந்திர தோவல் தெரிவித்துள்ளார்.