Port City-யில் தோண்டத் தோண்ட வௌிவந்த மனித எழும்புக் கூடுகள்!

Port City-யில் தோண்டத் தோண்ட வௌிவந்த மனித எழும்புக் கூடுகள்!

கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையின் போது குறைந்தது ஐந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  

Port City Expressway திட்டத்தின் ஒரு பகுதியாக, பழைய செயலக கட்டிடத்திற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்தால் கட்டுமானப் பணியின் போது கடந்த ஜூலை 13ஆம் திகதி மனித எச்சங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் மேற்பார்வையின் கீழ் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்டத்தில் நீதித்துறை மருத்துவ அதிகாரிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதல் அகழ்வாராய்ச்சி கட்டத்தின் பின்னர், இரண்டாம் கட்டம் செப்டம்பர் 26 முதல் 28 வரை நடைபெற்றது.

இதன் விளைவாக கூடுதல் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

அவை இப்போது மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு (வடக்கு) குற்றப்பிரிவு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழாய்வுப் பணிகளுக்கு சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமை தாங்குகிறார்.

அந்த இடத்தில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டம் அக்டோபர் 17, 2024 அன்று ஆரம்பமாக உள்ள நிலையில், விசாரணைகளின் தொடர்ச்சியாக எச்சங்களின் தோற்றம் மற்றும் அதன் சூழ் நிலைகள் பற்றி கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.