புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் சிறையில்!

புலமைப்பரிசில் பரீட்சை கேள்விகளை கசியவிட்ட இருவரும் சிறையில்!

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஆகி​​யோரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று (07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை வெளியாட்களுக்கு வழங்கியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.