அம்பாறையிலுள்ள பல வீதிகள் முடக்கம்!

அம்பாறை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கல்மடுவ பிரதேசத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அம்பாறையிலுள்ள பல வீதிகள் முடக்கம்!

இதேவேளை, நிலவும் வெள்ள நிலைமை காரணமாக அம்பாறை - இகினியாகல பிரதான வீதியும் சுதுவெல்ல பகுதியிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான அம்பாறை இகினியாகல சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகள் 12 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.