அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம்

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதை தவிர்க்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக அரச அதிகாரிகள் சிலர் தம்மிடம் முறையிட்டுள்ளதாக சபாநாயகர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் மீது விமர்சனங்கள் இருப்பின் அவர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நிலையியற் கட்டளை 91(எ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், அவ்வாறான அவதூறு அல்லது தவறான கருத்துக்களை ஹென்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.