ஹரக் கட்டாவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு!

சிகிச்சைகளுக்காக பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்க மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டாவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு!

சிகிச்சைகளுக்காக பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக்க மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடம்பில் ஏற்பட்டிருந்த சிராய்வு காயங்கள் காரணமாக அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாககுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்பு காவலில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், அந்த முயற்சி கைக்கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 'ஹரக் கட்டா'வின் மனுவை விசாரிக்கும் வரை நீதித்துறை மற்றும் சட்டமா அதிபருக்கு தெரிவிக்காமல் அவரை தடுத்து வைத்துள்ள சிறையிலிருந்து அகற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 'ஹரக் கட்டா' தற்போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து அகற்ற வேண்டாம் என குற்றப்புலனாய்வு மற்றும் பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.