சீஷெல்ஸ் படையின் பிடியில் உள்ள மீனவர்களை உடனடியாக அழைத்து வாருங்கள் - சஜித் பிரேமதாச!

சீஷெல்ஸ் படையின் பிடியில் உள்ள  மீனவர்களை உடனடியாக  அழைத்து வாருங்கள் - சஜித் பிரேமதாச!

அண்மையில் டிக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகுகளை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

பின்னர் சீஷெல்ஸ் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்த நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும், அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து, வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், அந்த நாட்டிலுள்ள எமது தூதுவர் கூட ஒருமுறை மாத்திரமே அவர்களைச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் தலையிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.