கிளிநொச்சியில் இருதரப்பு மோதல் - ஐவர் படுகாயம்!

கிளிநொச்சியில் இருதரப்பு  மோதல் - ஐவர் படுகாயம்!

கிளிநொச்சி – ராமநாதபுரத்தில் இருதரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக, ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் 28 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 24, 33 மற்றும் 59 வயதுகளையுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.