வற் வரி குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம்!

வற் வரி குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம்!

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்காக நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, குறித்த விவாதம் நாளை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.