அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்  டக்ளஸ்! 

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்  டக்ளஸ்! 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை  அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே  தமது இலக்காக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என எதிர்ப்பார்த்திருந்த போதிலும், சில விடயங்கள் காரணமாக அந்த தீர்மானத்தை கைவிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.