டன்சினன் - நுவரெலியா பிரதான வீதி திறந்து வைப்பு!

டன்சினன் - நுவரெலியா பிரதான வீதி திறந்து வைப்பு!

டன்சினன் பகுதிலிருந்து பூன்டுலோயா வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதை இன்றைய தினம்(20) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் குறித்த வீதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

பல வருட காலமாக குன்றும் குளியுமாக காணப்பட்ட 9 கி.மீ வரையிலான குறித்த பாதையானது அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சின் 13 பில்லியன் ரூபாய் நேரடி நிதி ஒதுக்கீட்டின் மூலம், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  செப்பனிடப்பட்டது.

இந்தி வீதியை 30 க்கும் மேற்பட்ட தோட்டங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை தேவைகள், மற்றும் பல்வேறு தேவைகளுக்காக மக்கள் பயண்படுத்தி வந்தனர்.

இதன் போது அமைச்சர்கலான ஜீவன் தொண்டமான் பந்துல குனவர்தன நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறுதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்