18 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை வரம்பு!

18 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை வரம்பு!

இலங்கையில் இந்த வாரத்தில் 18 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பொதுமக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவர தெரிவித்தார்.

கோதுமை மா, வெள்ளை சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், முட்டை, ரின் மீன், பச்சை அரிசி, நாட்டு அரிசி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான விலை வரம்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இந்த விலை வரம்பு நுகர்வோர் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அறிவிக்கப்படுவதாகவும் சந்தையில் நிலவும் போட்டியின் மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என நம்புவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.