மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் - அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் - அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது வழங்கல் ஆகியவற்றுடன் இணைந்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறித்த சேவைகள் அத்தியாவசியமான சேவைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.