சாந்தனின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டது.

வீட்டிலிருந்து பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் வழியில் பல இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு  நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் என்ற சுதேந்திர ராசா சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.

குறித்த கொலை வழக்கில் தண்;டனை அனுபவித்து வந்த சாந்தன் விடுவிக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பை அடுத்து அவர் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும் அவர் மாரடைப்பு காரணமாக கடந்த 28ஆம் திகதி காலை உயிரிழந்ததாக ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையின் பிரதான வைத்தியர் தோணிராஜன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

சாந்தனின் சொந்த ஊரில் மலரஞ்சலியும் நினைவு பேருரைகளும் இடம்பெற்றன.

சட்டதரணி புகழேந்தி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் இந்தியா மீது பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.