போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புக்காக மேற்கொள்ளப்படும் குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்குப் பின்னர், குறித்த குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று அவர் கூறினார்.