மின்சார கட்டண திருத்தம் குறித்து பெப்ரவரியில் ஆய்வு!

2024ம் ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைப்பதில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதனால் மின்சார வாரியம் முன்வைத்த முன்மொழிவு பொதுமக்களுக்கான கலந்தாய்வு இன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.