முன்னாள் கிரிக்கட் வீரர் இன்னொருவரை ஆட்டநிர்ணய சதிக்கு உட்படுத்தியதால் விளக்கமறியல்!

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் போட்டியாளர் சச்சித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கட் வீரர் இன்னொருவரை ஆட்டநிர்ணய சதிக்கு உட்படுத்தியதால் விளக்கமறியல்!
Ex-cricket player

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் போட்டியாளர் சச்சித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (06) காலை கைதானார் 

இதனையடுத்து முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2020 லங்கா பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற இரண்டு வீரர்களை, தொலைபேசி அழைப்புகள் மூலம் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடத் தூண்டியதாகவும், அவர்களை அச்சுறுத்தியதாகவும் சசித்ர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.