முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஏ. எச். எம்.பௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 4 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஏ. எச். எம்.பௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, அமைச்சின் செயற்பாடுகளுக்கு நெதர்லாந்தில் இருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் வழங்கப்பட்டது.
எனினும் அவர் தனது தனிப்பட்ட பாவனைக்காக அதனை பயன்படுத்தியுள்ளார்.