சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் அவதானமாக இருக்கவும் - நாளை நீங்களும் சிக்கலாம்!

மத ரீதியான வன்முறைகளை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் அவதானமாக இருக்கவும் - நாளை நீங்களும் சிக்கலாம்!

மத ரீதியான வன்முறைகளை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த வகையான குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக முறைப்பாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

0112 300 637, என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112 381 045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.