கைகலப்பாக மாறிய சொத்து மோதல் : மகனை கொலை செய்த தந்தை!

சொத்து பிரச்சினை காரணமாக தந்தை ஒருவரால் அவரது மகன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குருநாகல் பகுதியில் பதிவாகியுள்ளது.

கைகலப்பாக மாறிய சொத்து மோதல் : மகனை கொலை செய்த தந்தை!

சொத்து பிரச்சினை காரணமாக தந்தை ஒருவரால் அவரது மகன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குருநாகல் பகுதியில் பதிவாகியுள்ளது.

நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியது.

இதனையடுத்து கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், குருநாகலை மா எலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.