கில்மிஷாவுக்கு கிடைத்த மறக்க முடியாத சுயம்பி!

இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப எனும் பாடல் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையை சேர்ந்த கில்மிஷா உதயசீலனுக்கு  ஜனாதிபதி  ரணில்  விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு 04 நாட்கள்  உத்தியோகப்பூர்வ விஜயத்தை  முன்னெடுத்துள்ள நிலையில்  கில்மிஷாவை நேற்று (04) சந்தித்துள்ளார். 

இந்தியாவின் “ஸீ தமிழ்” தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியின்  இறுதி போட்டியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா அண்மையில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இருவர் கலந்துகொண்டனர்.

மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இவர்களில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.