இலங்கைகான பயணத்தை ஒத்திவைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான பயணத்தை தின நியமம் இன்றி ஒத்திவைத்துள்ளார்.

இலங்கைகான பயணத்தை ஒத்திவைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

அவர் இன்றைய தினம் (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், அவரது இலங்கை விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு தொடர்பில் இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரது இலங்கை விஜயம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் அவரது இலங்கை விஜயம் பிற்போடப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.