மனைவி, மக்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி கைது!

மனைவி மற்றும் மகள்களால் தாக்கப்பட்டு, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் மீட்டுள்ளனர்.

மனைவி, மக்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி கைது!

மீட்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி சிலாபம் பொது வைத்தியசாலையில், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ராஜகந்தலுவ - மனவேரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வீட்டிற்கு சென்று தமது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது குறித்த அதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார். 

இதனையடுத்து, மனைவி மற்றும் அவரது மகள்கள் அவர் மீது தாக்குதலை நடத்தி கை கால்களை கட்டியுள்ளனர்.

மனைவி மற்றும் மகள்கள் மீது தாக்குதலை நடத்திய குற்றத்திற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.