கல்குடா பொலிஸ் வாகனம் வீட்டு மதில் ஒன்றில் மோதி விபத்து!

கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வாகனம் இன்று (3)  வீட்டு மதில் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக பயணம் செய்த ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்பாகவுள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் மோதியுள்ளது.

இவ் விபத்தில் மதில், ஜீப் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இவ் விபத்தில் ஜீப் வாகனத்தை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.