வளி மாசுபாடு பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
வளி மாசுபாடு காரணமாக இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இன்றும் நாளையும் இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களில் டெல்லியில் வளி மாசடைவு மேலும் தீவிரமடையும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷ தன்மையுடன் கூடிய பொருட்களை எரிப்பதன் காரணமாக வளி மாசடைவு விகிதம் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் டெல்லியில் வளி மாசுப்பாடு அதிகரித்து வருவதனால் அங்கு சுவாச நோய்க்கு உள்ளாகுபவர்களின் விகிதமும் அதிகரித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.