நாட்டில் வறட்சியான காலநிலை நீடிக்கும் - நீரை மட்டுப்படுத்தி பயன்படுத்தவும்!

கோடைப் பருவநிலை நிலவும் காலப்பகுதியில் நீர் தேவையை மிகவும் சிக்கனமாக கையாளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் வறட்சியான காலநிலை நீடிக்கும் - நீரை மட்டுப்படுத்தி பயன்படுத்தவும்!

நாட்டின் பல பாகங்களில் பெரும்பாலும் வறட்சியாக காலநிலை நிலவும் எனவும் இதன்போது நீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் திணைக்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து ஏனைய பணிகளுக்கு தேவையறிந்து பயன்படுத்துவதன் ஊடாக வறட்சியான காலப்பகுதியில் அநாவசிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டி வராது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (07) இடைக்கிடை மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறு உள்ளதாகவும் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்-

அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் சீரான வானிலை நிலவும். 

அத்துடன், காலி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.