முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டானில் பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு! 

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டானில் பாரவூர்தி மீது துப்பாக்கிச் சூடு! 

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் - கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் பாரவூர்தியொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்றிரவு (14) இணைந்து முன்னெடுத்த விசேட வீதி சோதனையின் போது மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி வேகமாக பயணித்த பாரவூர்தி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை வழங்கப்பட்டது.

எனினும் குறித்த பாரவூர்தி சோதனை சாவடியை வேகமாக கடந்து பொலிஸாருக்கு ஒத்துழைக்காது சமிக்ஞையை மீறி பயணித்துள்ளது.

இதனையடுத்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்ந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கற்சிலைமடு பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பாரவூர்தியில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.