பசறையிலுள்ள  பாடசாலை ஒன்றில்  உணவு ஒவ்வாமை -   8 மாணவர்கள்  வைத்தியசாலையில் 

பசறையிலுள்ள  பாடசாலை ஒன்றில்  உணவு ஒவ்வாமை -   8 மாணவர்கள்  வைத்தியசாலையில் 

பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 8 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 மாணவிகளும், 4 மாணவர்களும் அடங்குவதாக பசறை மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நமுனுகுல - கனவரெல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், உணவு ஒவ்வாமை காரணமாக 9 மாணவர்கள் நேற்று காலை பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.