சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் சிறுநீரக நோய் அபாயம்!

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் சிறுநீரக நோய் அபாயம்!

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான கிறீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் இந்திரா கஹவிட்ட இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் இந்திரா கஹ்விட்ட, "24 மணி நேரத்தில், நான் கிட்டத்தட்ட 60 நோயாளிகளை பரிசோதித்தேன்.  

அதில் 10%, வெண்மையாக்கும் கிறீம்களால் ஏற்படும் பிரச்சினைகளுடன் வந்தனர். இவை நீண்ட கால பிரச்சினையல்ல, குறுகிய கால பிரச்சினை. இப்போது நான் சில விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன்.

உதாரணத்திற்கு, உள்ளங்கைகள், உள்ளங்கால்களா கருப்பு நிறமாக மாறுகின்றன.

அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிறீம்கள்தான்.

மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக ஆரஞ்சு நிறமாக மாறும். 

இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன. குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன.  

புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது" என்று தெரிவித்தார்.