நாட்டில் 10 சதவீதமானோர் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்துகின்றனர்!

இலங்கையில் மது அருந்துவோரில் 10% பேர் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்துவதாக மதுபான மற்றும் போதைப் பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 10 சதவீதமானோர் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்துகின்றனர்!

இலங்கையில் மது அருந்துவோரில் 10% பேர் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்துவதாக மதுபான மற்றும் போதைப் பொருள் தகவல் மையத்தின் 

நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் அனுமதிக்கப்பட்ட மதுபானம் மற்றும் புகைத்தல் பொருட்களின் விலைகள் உயர்ந்த அளவில் இருப்பதன் காரணமாக குறைந்த வருமானத்தை பெறுவோர் மாற்று மதுபானங்களை பயன்படுத்துகின்றனர்.

இதன்காரணமாக கடந்தகாலங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.