இன்று அனுராதபுரம் செல்கிறார் இந்தியப் பிரதமர்

இன்று அனுராதபுரம் செல்கிறார் இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரசுமுறை விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியை வழிபாடவுள்ளார்.

ஸ்ரீ மகா போதிசத்துவர் வழிபாட்டுக்கு பிறகு, இந்திய அரசாங்கத்தின் நிறுவப்பட்ட மகாவ-அனுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பை இந்தியப் பிரதமர் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தா ரயில் பாதையும் இன்று காலை திறக்கப்பட உள்ளது.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனுராதபுர விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, மருத்துவமனை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அனுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் சாலைகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்பட உள்ளன.

இந்த சாலைகள் மூடப்படும் போது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.