வெசாக் தினத்தில் கைதிகள் சட்டவிரோதமாக விடுவிப்பு - ஜனாதிபதி பொதுமன்னிப்பில் இல்லை!

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.அதுல திலகரத்ன என்ற கைதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக தகவல் வெளியாகியாகியுள்ளது.
இந்த செய்தி குறித்து சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.
குறித்த விசாரணையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் வெசாக் தினத்தில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.