காலியில் சிறைக்கைதி காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

காலியில் சிறைக்கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

காலியில் சிறைக்கைதி காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

காலி – கொட்டாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.